17 ஐகோர்ட் நீதிபதிகள் ‘டிரான்ஸ்பர்’- சென்னைக்கு ஒருவர் வருகை; ஒருவர் இடமாற்றம்
2021-09-21@ 17:05:40

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய 17 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கொல்கத்தாவுக்கும், குஜராத் நீதிபதி ஒருவர் சென்னைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த மாதம் ஒன்பது நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த 17 நீதிபதிகள் தற்போது இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக மேற்கண்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டம், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இடமாற்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட 17 நீதிபதிகளின் பட்டியலில், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பரேஷ் ஆர்.உபாத்யாய், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த நீதிபதிகள் 8 பேர், தலைமை நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 நீதிபதிகள் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!