இலங்கையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிப்பு!!
2021-09-02@ 15:03:06

கொழும்பு : இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமானதால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கால சுற்றுலாத் துறை முடங்கியதை அடுத்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் சக்கரை, அரிசி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
சாதாரண மக்கள் உண்ணும் நாட்டரிசி ரகத்தில் விலை ஒரு கிலோவுக்கு 2.5 மடங்கு உயர்ந்துள்ளது.ரூ. 60ல் இருந்து ரூ. 80 வரை விற்கக்கூடிய ஒரு கிலோ நாட்டரிசி விலை தற்போது ரூ.140க்கு மேல் உயர்ந்துவிட்டது.இலங்கையில் கேரள அரிசி ஒரு கிலோ ரூ.135க்கும் சம்பா அரிசி ரூ.140க்கும் விற்கப்படுகிறது. பால் பவுடருக்கும் இலங்கையில் தட்டுப்பாடு நிலவுவதால் அதன் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது.ரூ. 350க்கு விற்கப்பட்ட 400 கிராம் பால்பவுடர் தற்போது ரூ.1000க்கு விற்கப்படுவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.இலங்கையில் ரூ. 80க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ சர்க்கரை தற்போது ரூ. 240க்கு விற்கப்படுகிறது.இலங்கையில் ரூ.350க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ உளுந்தம் பருப்பு தற்போது ரூ.1050க்கு விற்கப்படுகிறது.ஒரு கிலோ பச்சைப்பயிறு விலை ரூ.150ல் இருந்து தற்போது ரூ. 850 ஆக அதிகரித்துவிட்டது.இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ. 7000க்கு விற்கப்படுவதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொருளாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அமல்படுத்தியுள்ளார்.அரிசி, சக்கரை மற்றும் இதர உணவு பொருட்களை பதுக்குவோருக்கு கடுமையாக தண்டனை அளிக்கவும் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த அத்தியாவசிய பண்டங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையராக ராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்உணவு பற்றாக்குறையால் கடைகளின் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.அந்நிய செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதியை இலங்கை அரசு தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. .
மேலும் செய்திகள்
லும்பினியில் பிரதமர் மோடி பேச்சு நேபாளத்துடனான உறவு வலுவானது
இம்ரானை கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும்..! மாஜி அமைச்சர் ஷேக் ரஷித் அகமது பரபரப்பு பேட்டி
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: உலக சுகாதார அமைப்பு தகவல்
இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது: பிரதமர் ரணில் பேச்சு
போனில் ஆர்டர் செய்தால் போதும்...! டேபிள் தேடிவந்து உணவு பரிமாறும் ‘ரோபோ’..! வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு
நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவிப்பு..!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!