காளையார்கோவில் பகுதி நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரங்களால் பக்.. பக்.. பயணம்
2021-08-26@ 14:10:32

காளையார்கோவில்: தஞ்சாவூர்- சாயல்குடி மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் பெரிய மரங்கள் உள்ளன. இவற்றில் காளையார்கோவிலில் இருந்து மறவமங்கலம் செல்லும் ரோட்டில் பொருசடி உடைப்பு பகுதியில் சில மரங்கள் பட்டுப்போய் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த சாலை வழியாகத்தான் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஏராளமானோர் டூவீலரிலும், நடந்தும் சென்று வருகின்றனர்.
இந்த பட்டுப்போன மரங்களால் வாகனஓட்டிகள் ஒருவித பயத்துடனே கடந்து சென்று வருகின்றனர். எனவே மரங்கள் முறிந்து பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதனை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனியை வீசி பாஜகவினர் அராஜகம்
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி ஊர்வலம்: இறுதிச்சடங்களுக்குப் பிறகு சொந்த ஊரில் உடல் அடக்கம்...
ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை வந்தடையும்...அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!
செய்யூர் அருகே அதிமுக தலைவரின் மகனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கட்சியினர் திடீர் சாலை மறியல்
திருத்தணி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி; பயணிகள் கோரிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!