நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி வருண்குமாரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் புகார்
2021-08-10@ 00:17:08

திருவள்ளூர்: நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் புரட்சி பாரதம் கட்சி மாநில வழக்கறிஞர் அணி பொது செயலாளர் கே.எம்.ஸ்ரீதர் தலைமையில் புகார் மனு கொடுத்துள்ளனர். மனு விவரம்: நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு தாழ்த்தப்பட்டோர் பற்றி அவதூறாக பேசி களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர் அமைதியான சூழலை சாதிய வன்மம் உணர்வோடு பேசி சீர்குலைத்த தால் கலகம் செய்ய தூண்டுதல், ஜாதி மத விரோத உணர்வைத் தூண்டும் விதமாக பொது அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி, மாவட்ட தலைவர் பிரின்ஸ் ஜி.பன்னீர், மாவட்ட பொருளாளர் நயப்பாக்கம் டி.மோகன், மாநில செயலாளர் டி.கே.சீனிவாசன், மாநில நிர்வாகிகள் சி.பி.குமார், பொன்னுதுரை, நகர செயலாளர் எம்.எழில்வண்ணன், நகர தலைவர் டி.தேவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:
Actress Meera Mithun Action SP Varunkumar Revolutionary Bharat Party Complaint நடிகை மீரா மிதுன் நடவடிக்கை எஸ்பி வருண்குமாரிடம் புரட்சி பாரதம் கட்சி புகார்மேலும் செய்திகள்
பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை
இரண்டாம் சீசன் நெருங்குகிறது பூங்கா பராமரிக்கும் பணி தீவிரம்
முதுமலை எல்லை சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்: வனத்துறையினர் நடவடிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,000 கனஅடியாக சரிவு: 16 கண் மதகுகள் வழியே வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தம்..!!
தர்மபுரி வன மண்டலத்தில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ₹138 கோடியில் அகழி, மின்வேலி: அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு
நீர்வரத்து 3200 கன அடியாக சரிவு பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்: கரையோர மக்கள் நிம்மதி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!