கேரள விமான பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை: பெங்களூருவில் தமிழக பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு
2021-08-06@ 00:04:42

சென்னை: கேரள மாநிலத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு நேற்று முதல் கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில், கேரள மாநிலத்திலிருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் நிறுத்தி, கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றிதழ்களை பரிசோதித்த பின்பே வெளியே அனுப்புகின்றனர்.
சான்றிதழ்கள் இல்லாமல் வருபவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுத்த பின்பே வெளியே அனுமதிக்கின்றனர். இல்லையேல் கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ்களும் போட்டுள்ளவர்கள், அதற்கான சான்றிதழ்களை காட்டினால் அனுமதிக்கப்படுகின்றனர்.கேரளாவில் இருந்து, வருபவர்களை கண்காணித்து ஆய்வு செய்வதற்காக, செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை உள்நாட்டு விமானநிலையத்தில் 30 பேரை பணியமர்த்தியுள்ளது. அவர்கள் சுழற்சி முறையில் ஷிப்டிற்கு 10 பேர் வீதம் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல பெங்களூரிலும் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
அதிமுக வேட்பாளர் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி: தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பு மனு தாக்கல்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 59 பேர் பாதிப்பு: யாரும் உயிரிழப்பு இல்லை; 36 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
வெளிச் சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை
சிகிச்சைக்காக தந்தை டி.ராஜேந்திரரை வெளிநாடு அழைத்து செல்கிறோம்: சிலம்பரசன் அறிக்கை.!
மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பதால் அதிக பரப்பளவில் பயிரிட வாய்ப்பு: ஓபிஎஸ் வரவேற்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன் தூர்வாரிவிடுவோம்: அமைச்சர் துரைமுருகன் உறுதி
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!