கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து; மஞ்சிகள் எரிந்து நாசம்
2021-08-05@ 11:52:32

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியிலிருந்து திருப்பூர் செல்லும் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிற்சாலைக்கு வெளியே மஞ்சிகள் உலர வைக்கப்பட்டு, பண்டல்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை திடீரென தொழிற்சாலையிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதற்குள் தீ மளமளவென உலர வைக்கப்பட்ட மஞ்சிகளில் பரவியது. விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
மேலும் தீயை கட்டுப்படுத்த கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு இரண்டு வண்டிகளில் தீயை அணைக்க தண்ணீர் அடிக்கப்பட்டது.காலை 9 மணி வரை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை நார் மஞ்சிகள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!