பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் தலைமையில் சிறப்பு குழு!: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி..!!
2021-07-26@ 15:30:08

கொல்கத்தா: முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது குறித்து விசாரணை செய்ய மேற்குவங்க அரசு சிறப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலிய உளவு செயலியான பெகாசஸ் மூலமாக இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற அலுவல்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். இந்நிலையில் பெகாசஸ் செயலி மூலம் மேற்குவங்கத்தில் உளவு பார்க்கப்பட்டது குறித்து விசாரிக்க அம்மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
ஹௌராவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எம்.வி.லோகூர், ஜோதிர்மாயி பட்டச்சாரியா ஆகிய ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து மம்தா பேசியதாவது, செல்போன் உளவு குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.லோகூர் மற்றும் ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோதிர்மாயி பட்டச்சாரியா ஆகியோர் தலைமையிலான குழு விசாரணை நடத்தும். விசாரணை சட்டம் 1952ன் பிரிவு 3ன் கீழ் இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழு, மேற்கு வங்கத்தில் உளவு செயலி மூலம் முக்கிய நபர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டது குறித்து விரைவில் விசாரணை செய்யும் என்று குறிப்பிட்டார். பெகாசஸ் செயலியை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது உறவினர் ஒருவரது பெயர்கள் சமீபத்தில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்தே தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் சிறப்பு குழுவை மேற்கு வங்க அரசு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது
அடுத்த 20,30 ஆண்டுகளுக்கு பாஜகவைமையப்படுத்தி இந்திய அரசியல் இருக்கும்: பிரஷாந்த் கிஷோர்
இடுப்புவலியால் தவித்த மனைவிக்காக ஸ்கூட்டார் வாங்கிய பிச்சைக்கார முதியவர்: தள்ளாத வயதிலும் மாறாதா காதல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தை: அறுவை சிகிச்சையில் ஆச்சரியம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!