கர்நாடகாவில் ஜூலை 19, 22ல் பத்தாம் வகுப்பு தேர்வு
2021-06-29@ 00:28:13

பெங்களூரு: கர்நாடக மாநில கல்வியமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் நேற்று அளித்த பேட்டி: இவ்வாண்டும் கொரோனா விதிமுறைகள் முழுமையாக பின்பற்றி வரும் ஜூலை 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் ஜூலை 19ம் தேதி கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வும் 22ம் தேதி முதல்மொழி, 2வது மற்றும் மூன்றாவது மொழிகளுக்கான தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தலா 40 மதிப்பெண்கள் என்ற வகையில் கேள்விகள் இருக்கும். ஒரு வகுப்பறையில் 12 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வசதி செய்யப்படும். தேர்வுகள் இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடக்கும். மாணவ, மாணவிகள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்வது, சானிடைசர் மூலம் கை சுத்தம் செய்வது உள்பட பல பணிகள் மேற்ெகாள்ளப்படும் என்றார்.
மேலும் செய்திகள்
வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை
ராமர் வேடத்தில் நடிக்க ரூ120 கோடி சம்பளம் கேட்கும் பிரபாஸ்
படப்பிடிப்பின்போது மாரடைப்பு: மலையாள நடிகர் காலித் மரணம்
பேச்சுவார்த்தையில் சுமூகம்: தெலுங்கு சினிமா தொழிலாளர் ஸ்டிரைக் வாபஸ்
சிரஞ்சீவி, வெங்கடேஷுக்கு பார்ட்டி கொடுத்த சல்மான்
அரிசி, பால் பவுடர் அனுப்பியது: இலங்கைக்கு இந்தியா ரூ65.3 கோடிக்கு உதவி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!