இந்திய அணி இன்று இலங்கை பயணம்: அடித்து நொறுக்க காத்திருக்கிறோம்..! கேப்டன் ஷிகர் தவான் பேட்டி
2021-06-28@ 15:09:13

மும்பை: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒன்டே, 3 டி.20 போட்டிகளில் ஆட உள்ளது. இதற்காக இந்திய அணியினர் இன்று மும்பையில் இருந்து கொழும்பு புறப்படுகின்றனர். இதையொட்டி நேற்று கேப்டன் தவான், பயிற்சியாளர் ராகுல்டிராவிட் ஆகியோர் ஆன்லைனில் பேட்டி அளித்தனர். அப்போது தவான் கூறியதாவது: இது ஒரு புதிய சவால். நாங்கள் நன்றாக செயல்படுவோம் என்று நம்புகிறோம். திறமையை வெளிப்படுத்த இது ஒரு அருமையான வாய்ப்பு. எப்போது களம் இறங்கி அடித்து நொறுக்குவோம் என ஆர்வமுடன் காத்திருக்கிறோம், என்றார்.
ராகுல் டிராவிட் கூறியதாவது: எங்களிடம் ஒரு நல்ல அணி உள்ளது, 20 வீரர்கள் உள்ளனர். இந்த குறுகிய தொடரில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது. தொடரை வெல்வதற்கான சிறந்த அணி எதுவோ, அதை நாங்கள் தேர்வு செய்வோம். சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, தவான் போன்ற மூத்தவர்களிடமிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆனால் எங்களது பிரதான இலக்கு, தொடரை வெல்வது தான், என்றார்.
மேலும் செய்திகள்
மெஸ்ஸி: 100
மயாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜெஸ்ஸிகா
சில்லி பாயிண்ட்ஸ்
பும்ராவுக்கு மாற்று வீரரை விரைவில் முடிவு செய்வோம்...: எம்ஐ கேப்டன் ரோகித் நம்பிக்கை
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் வேறு நாட்டில் நடத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்: வாசிம் கான் தகவல்
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் அப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!