இந்தியாவில் பைசர் தடுப்பூசி விரைவில் வர வாய்ப்பு
2021-05-26@ 02:02:47

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, அமெரிக்க நாட்டு நிறுவனங்களான மாடர்னா, பைசர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக, மாடர்னா தடுப்பூசி உற்பத்தி செய்ய சிப்லா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மாடர்னா தடுப்பூசி 5 கோடி டோஸை உற்பத்தி செய்ய சிப்லா நிறுவனம் மத்திய அரசிடம் ஏற்கனவே அனுமதி கேட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு, சுகாதாரம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாடர்னா தடுப்பூசி 2022ம் ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகம் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பைசர் தடுப்பூசி 5 கோடி டோஸை இந்த ஆண்டே தர தயார் நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 1 கோடி டோஸ், செப்டம்பரில் 2 கோடி டோஸ், அக்டோபரில் ஒ கோடி டோஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று காவல் கட்டுப்பாட்டு அறை மீது கையெறி குண்டு வீச்சு: போலீஸ்காரர் உட்பட 2 பேர் காயம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி.. 30க்கும் மேற்பட்டோர் காயம்!!
வடக்கு வங்கக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!
தமிழ்நாடு- கேரள எல்லையில் வாயில் காயத்துடன் உயிருக்கு போராடும் காட்டு யானை: உடனடி சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!