சுவிட்சர்லாந்து, நெதர்லாந்தில் இருந்து டெல்லி வந்த மருத்துவ பொருட்கள்
2021-05-08@ 00:09:43

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, நெதர்லாந்தில் இருந்து மருத்துவ பொருட்கள் ஏற்றிய விமானங்கள் நேற்று டெல்லி வந்தன. கொரோனா இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா என ஏராளமான நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவிற்கு அனுப்பி உதவி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று சுவிட்சர்லாந்து, நெதர்லாந்தில் இருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றிய விமானங்கள் டெல்லி வந்தன. நெதர்லாந்தில் இருந்து 449 வென்டிலேட்டர்கள், 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ஏற்றிய விமானம் நேற்று காலை டெல்லி வந்தது.
இதேபோல் சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 50 வென்டிலேட்டர்கள் மற்றும் இதர மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் என 13 டன் உதவி பொருட்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலந்தில் இருந்து 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானத்தில் நேற்று காலை டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தன.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!