அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவராக மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் தேர்வு
2021-04-22@ 00:14:37

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் 30 ஆண்டுகளாக வக்கீல் தொழில் செய்துவரும் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவராகவும், தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், அகில இந்திய பார்கவுன்சிலில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அகில இந்திய பார்கவுன்சிலின் இணை தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், துணைத்தலைவர் பதவி வகித்து வந்த எஸ்.ஏ.தேஸ்முக் ராஜினாமா செய்ததையடுத்து காலியாக உள்ள அகில இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது.
இந்த தேர்தலில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் சந்திர ஸ்ரீமாலி மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். எஸ்.பிரபாகரன் சிவில் மற்றும் ரிட் வழக்குகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றவர்.
மேலும் செய்திகள்
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு.: மொத்தம் 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸ் மீட்பு
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாதனையாளர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூலிக்கும் அமைப்புகள் எவை? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
புலி பட சம்பள விவகாரம்; நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கு: வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை.! ஐகோர்ட் உத்தரவு
ரூ.161 கோடியில் 16 துணை மின் நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!