நீடாமங்கலத்தில் பஸ் நிலையம், நிழற்குடை இல்லை-3 இடத்தில் நிற்கும் பஸ் நிறுத்தத்தில் வெட்டவெளியில் பயணிகள் அவதி
2021-03-29@ 12:55:53

*மக்களின் குரல்
நீடாமங்கலம் : நீடாமங்கலம் ஒரு முக்கியமான தாலுகாவாக உள்ளது. இவ்வூரில் உள்ள பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. நீடாமங்கலத்தை சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் நீடாமங்கலம் வந்துதான் வெளியூர் செல்ல வேண்டும். அதே போன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீடாமங்கலம் வந்துதான் தஞ்சை, திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு படிக்க செல்ல வேண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி நீடாமங்கலம் வழியாக நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நீடாமங்கலம் தாலுகா தலைநகரமான, ஊரில் அரசு மருத்துவமனை, 2 மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி, ஒன்றியம், பேரூராட்சி, தாலுகா அலுவலகம், 2 அரசு தொடக்கப்பள்ளி, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், கருவூலம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், ரயில் நிலையம், இவ்வளவு இருந்தும் மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள், அலுவலர்கள் ஆகியோர், பயன்பாட்டிற்கு நீடாமங்கலத்தில் ஒரு பஸ் நிலையம் இல்லை. மக்கள் மாணவிகள் மழை மற்றும் வெயில் நேரத்தில் நின்று செல்ல 3 இடத்தில் பேருந்து நிற்கிறது.
ஒரு இடத்தில் கூட பயணிகள் நிழற்குடை இல்லை. இதுபற்றி அரசுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ எந்த கவலையும் இல்லை. எனவே நீடாமங்கலத்தில் பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் பயன்பெறும் நிலையில் பஸ் நிலையம் மற்றும் பயணிகள் நிழற்குடை வைக்க வேண்டும் என நீடாமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!