விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை அகலப்படுத்தும் பணி நிறுத்தம் -வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
2021-01-29@ 14:17:07

சேத்தியாத்தோப்பு : விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை பணிகள் தற்போது கரைமேடு கிராம பகுதியில் நடைபெறாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். நகாய் திட்ட சாலை விரிவாக்க பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலையோரம் இருந்த வீடுகள், கடைகள், நிழற்குடைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டு சாலைப்பணி துவங்கப்பட்டது.
விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை அகலப்படுத்தி உயரமான சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தற்போது சில இடங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது. புவனகிரி ஒன்றியத்துக்குட்பட்ட கரைமேடு-சேத்தியாத்தோப்பு வரை பல இடங்களில் பள்ளங்களும், சில இடங்களில் சரிவு ஏற்பட்டு பெயர்ந்தும் உள்ளது.
இதனால் இருசக்கர வாகனங்களில் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கும்பகோணத்திலிருந்து சேத்தியாத்தோப்பு வழியாக செல்லும் பேருந்துகளும், சிதம்பரத்திலிருந்து புவனகிரி வழியாக சேலம் செல்லும் பேருந்துகள், இதனை தவிர்த்து வடலூர், பண்ருட்டி, கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் ஓட்டுநர்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே கனமழையால் மிகவும் சேதமடைந்துள்ள விகேடி சாலையை போர்க்கால அடிப்படையில் நகாய் திட்ட அதிகாரிகள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.! டெல்டா பாசனத்திற்கு 24ம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்கிறார்
பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையில் நல்லது எதுவும் இல்லை; அமைச்சர் பொன்முடி பேச்சு
அரிசி, மண்ணெண்ணை கடத்தல் தடுப்பால் ரூ.2,630 கோடி சேமிப்பு; அமைச்சர் சக்கரபாணி தகவல்
கோயில் குளத்தை தூர்வாரிய போது சோழர் காலத்து 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு
உதகைப் பயணத்தில் இன்று பழங்குடியினரான தோடர்களின் கிராமத்திற்குச் சென்று, அவர்களது தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்