மூடநம்பிக்கையால் அரங்கேறும் கொடூரம்: உ.பி.யில் குழந்தை பேறு வரத்துக்காக 7 வயது சிறுமி நரபலி.. உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்ட அதிர்ச்சி..!!
2020-11-17@ 13:51:20

லக்னோ: குழந்தை பேறு கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையால் சிறுமி ஒருவர் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்டிருப்பது உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கான்பூரை ஒட்டிய புறநகர் பகுதியில், உடல் பாகங்கள் பிடுங்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் கிடந்தது. உடலை கைப்பற்றிய உத்திரப்பிரதேச காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தை பேறு கிடைப்பதற்காக சிறுமியை கொன்று நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியை நரபலி கொடுத்த அங்குல், பீரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து கான்பூர் எஸ்.பி. பிரிஜேஷ் குமார் தெரிவித்ததாவது, பரசுராம் என்பவர் தான் அங்குல், பீரன் ஆகியோருக்கு பணம் கொடுத்து இருக்கிறார். இருவரும் மது அருந்திவிட்டு சிறுமியை கடத்தியிருக்கின்றனர்.
முதலில் சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர். பிறகு சிறுமியை கொடூரமாக கொன்றுவிட்டு, அவரது நுரையீரலை துண்டித்து எடுத்து சென்று குழந்தை இல்லாத பரசுராம் தம்பதியிடம் கொடுத்துள்ளனர். கொலைக்கு காரணமான நான்கு பேரையும் கைது செய்துள்ளோம் என குறிப்பிட்டார். சிறுமியின் நரபலிக்கு காரணமான பரசுராம் தம்பதியையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அறிவியல் தொழில்நுட்பம், அபரிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த சூழலிலும், குழந்தை பேறு கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையால் சிறுமி ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் செய்திகள்
எங்கு சென்றாலும் சரக்கு கிடைக்கவில்லை; பீகார் முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்!.. குஜராத்தில் இருந்து போதை ஆசாமி மிரட்டல்
திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி
ராகுல் விஷயத்தில் ஒருங்கிணையும் எதிர்கட்சிகள்; காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணியா?.. கெஜ்ரிவால் கருத்தால் டெல்லியில் பரபரப்பு
கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
இன்று அதிகாலை ராஜஸ்தான், அருணாச்சலில் நிலநடுக்கம்
டெல்லி ராஜ்காட்டில் சத்தியாகிரக போராட்டம் எங்கள் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்துகிறீர்கள்!.. 32 ஆண்டுக்கு முன் நடந்ததை கூறி பிரியங்கா காந்தி உருக்கம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி