தமிழகத்தில் தான் ஒரு நாளைக்கு 90,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
2020-09-28@ 03:08:13

புதுக்கோட்டை: தமிழகத்தில் தான் ஒரு நாளைக்கு 90,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மேலூர் ஊராட்சி அம்மன்பேட்டையில் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார். அப்போது விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. களத்தில் நேரடியாக காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. இதில் கொரோனா அறிகுறி உடையவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிறப்பான சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆக்சிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்வதுடன் தேவைக்கு அதிகமான ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று கிராமப்புறங்களில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 40,000 படுக்கைகள் எண்ணிக்கையில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஒரு நாளைக்கு 90,000 எண்ணிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக கொரோனா பரிசோதனையில் பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றுமாறு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
In Tamil Nadu one day 90 000 RTPCR testing Minister Vijayabaskar informed தமிழகத்தில் ஒரு நாளை 90 000 ஆர்டிபிசிஆர் பரிசோதனை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்மேலும் செய்திகள்
கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சூனாம்போடு அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் நவீன கழிப்பறை
உத்திரமேரூரில் நடைப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;