நாகலாந்தில் சமைத்த மற்றும் சமைக்காத நாய் இறைச்சி விற்பனைக்கு தடை!!
2020-07-04@ 13:18:17

கோஹிமா: நாகலாந்தில் சமைத்த மற்றும் சமைக்காத நாய் இறைச்சி விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகலாந்து. இங்கு நாய்களின் இறைச்சிகளை உணவுப்பொருளாக பயன்படுத்தும் வழக்கம். இதற்காக, மேற்கு வங்காளம் உள்பட பிற அண்டை மாநிலங்களில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒரு நாய் ரூ.50 வரை அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாகலாந்தில் உள்ள திமாபூர் சந்தைகளில் உணவுக்காக நாய்கள் விற்கப்படுவது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. குறிப்பாக சாக்கு பை ஒன்றில் நாய் ஒன்றின் வாயை கட்டிவைத்தபடி ஒருவர் கொண்டு சென்ற படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நாய் இறைச்சி விற்பனைக்கு எதிராக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். நாகாலாந்தில் உடனடியாக நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளும் மாநில அரசுகளுக்கு பல்வேறு மனுக்களை அனுப்பின. இதன் தொடர்ச்சியாக நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக நாகலாந்து அரசு அறிவித்துள்ளது. நாகலாந்து தலைமைச்செயலாளர் பிறப்பித்த உத்தரவில், நாய் இறைச்சி ஏற்றுமதி, நாய் இறைச்சி சந்தைகள், சமைக்கப்பட்ட நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!