பழ விற்பனை நிலையமான திருவில்லி. பஸ் ஸ்டாண்ட்
2020-05-14@ 20:13:39

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் பழங்கள் விற்பனை செய்யும் நிலையமாக மாறி உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியே கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். திருவில்லிபுத்தூரில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் வியாபாரிகள் கலந்து ஆலோசித்து கடைகளில் கூட்டம் சேராத வகையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்தனர். அந்த வகையில், திருவில்லிபுத்தூர் மேட்டு தெரு மற்றும் திருவிகா பள்ளி அருகில் காய்கறி விற்பனை நிலையம், மங்காபுரம் பள்ளி மைதானத்தில் இறைச்சி, மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு திருவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக பஸ் ஸ்டாண்ட், பழங்கள் விற்பனை செய்யும் நிலையமாக மாறியுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு பஸ்கள் இயங்கும் போது பழக்கடைகள் மாற்றம் செய்யப்படும். அதுவரை பஸ் ஸ்டாண்டில் பழக்கடைகள் செயல்படும்’ என்றார்.
மேலும் செய்திகள்
2024 முதல் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க ஓலா நிறுவனம் திட்டம்: ஒரு கோடி இருசக்கர வாகனங்கள் தயாரிக்க நடவடிக்கை...
நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை; மனித உடலை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா?: ஐகோர்ட் கிளை கேள்வி
கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது.: ஐகோர்ட் கிளை
கிராமங்களில் கோயில் திருவிழாவிற்கு காவல்துறையின் அனுமதி தேவை இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது; சிறையில் அடைப்பு
கோதையாறு மலைப்பாதையில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்-பயணிகள் இல்லாததால் விபரீதம் தவிர்ப்பு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!