மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதள கணக்கை பெண்களிடம் ஒப்படைக்கிறேன்: மோடி டிவிட்
2020-03-04@ 00:09:33

புதுடெல்லி: ‘மகளிர் தினத்தன்று, எனது சமூக வலைதள கணக்கை பெண்கள் நிர்வகிக்கலாம்,’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் என சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் செயல்பட்டு வருபவர் பிரதமர் மோடி. இவரை பல லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்த ஞாயிறு முதல், சமூக வலைதள கணக்குகளை விட்டு வெளியேறுவது குறித்து யோசித்து வருகிறேன்,’ என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், சமூக வலைதள கணக்குகளில் இருந்து மோடி ஒட்டு மொத்தமாக வெளியேறுகிறாரா? அல்லது ஞாயிறன்று மட்டும் வெளியேறுகிறாரா? என்பது குறித்து குழப்பம் எழுந்தது. பிரதமரின் இந்த டுவிட், 26 ஆயிரம் முறை ரீடிவிட் செய்யப்பட்டு இருந்தது. மேலும், இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து ஹேஸ்டேக்குகளை பதிவிட்டனர். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட மற்றொரு டிவிட்டர் பதிவில், ‘தனது வாழ்க்கை, கடமைகளில் பிறருக்கு ஊக்கம் அளிப்பவர்களாக திகழும் பெண்களுக்கு, இந்த மகளிர் தினத்தில் எனது சமூக வலைதள கணக்குகளை விட்டுத் தருகிறேன்.
இது, பல லட்சம் பெண்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கும். நீங்கள் அதுபோன்ற சாதனைப் பெண்ணா? அல்லது அது போன்ற பெண்களை உங்களுக்கு தெரியுமா? அப்படி இருந்தால், அவர்களின் கதைகளை எனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்,’ என்று பதிவிட்டு “#SheinspiresUs’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். இதன் மூலமாக, சமூக வலைதள கணக்குகளில் இருந்து மோடி விலகுவதாக ஏற்பட்ட குழப்பத்துக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும் செய்திகள்
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு...
விற்பனையாகாததால் வேதனை சாலையில் டன் கணக்கில் தக்காளியை வீசிய விவசாயிகள்
75 வயது மாஜி ராணுவ வீரரின் 70 வயது மனைவிக்கு 54 ஆண்டுக்கு பின் ஆண் குழந்தை பிறந்தது: ராஜஸ்தானில் அதிசயம்
சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்: கேரள அரசு அறிவிப்பு
காஷ்மீர் நடிகையை கொன்ற 3 தீவிரவாதிகள் சிக்கினர்
பேய் பிடித்திருப்பதாக மந்திரவாதி கூறியதால் 5 வயது மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்: மூடநம்பிக்கையால் மகாராஷ்டிராவில் சோகம்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!