பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி
2019-02-05@ 16:43:54

மதுரை: பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவானது, இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சிறப்பு வாய்ந்த முருகன் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவிலின் சிறப்புகளை காக்கவும் எந்த நடவடிக்கையும் இல்லை.
திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பழமைவாய்ந்த பழனி முருகன் கோவிலின் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாதிடப்பட்டது. இதையடுத்து, பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியது. மேலும், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை ஆணையர், பழனி முருகன் கோவில் இணை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பிப்.26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை: நீர்வளத்துறை அறிக்கை
பணி நியமனங்களில் முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு குழு விசாரணை தொடங்கியது.! முதற்கட்டமாக ஆவணங்கள் ஆய்வு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக ஆதரவு அளிக்கும் கட்சிக்கு ஐஜேகே ஆதரவு: பாரிவேந்தர் பேட்டி
அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் குவிப்பு
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!