என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மீனாவின் இழப்புக்கு விரைவில் பதிலடி: ஆடியோ வெளியீட்டால் பரபரப்பு
2018-10-16@ 00:49:50

திருமலை: போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மீனாவின் இழப்புக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஆடியோ வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆந்திராவின் அரக்கு தொகுதி எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோர் கடந்த 23ம் தேதி மாவோயிஸ்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திரா- ஒடிசா மாநில எல்லையில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்திற்கு பிறகு ஆந்திரா, ஒடிசா மாநில போலீசார், சிஆர்பிஎப் இணைந்து தொடர்ந்து வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் நடந்த போலீசார் துப்பாக்கிச் சூட்டில் மீனா என்ற பெண் மாவோயிஸ்ட் இறந்தார்.
மீனா ஆந்திரா- ஒடிசா மாநில எல்லை மாவட்ட கமிட்டி இயக்கத்தின் உறுப்பினராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ஆந்திரா - ஒடிசா மாவோயிஸ்ட்கள் மண்டல கமிட்டி தலைவர் கைலாசம் என்ற பெயரில் ஊடகத்துறைக்கு அனுப்பப்பட்ட ஆடியோவில், போலீசார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்ட் மீனாவின் இழப்பு எங்கள் இயக்கத்திற்கு தீர்க்க முடியாத பேரிழப்பு. இதற்கு உரிய பதிலடி விரைவில் வழங்கப்படும். போலீசார் மலைவாழ் மக்கள் சிலரை வேண்டுமென்றே பிடித்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லாத நிலையில் அவர்களை போலீசார் கொடுமைப்படுத்துகின்றனர். உடனடியாக போலீசார் அதனை கைவிட வேண்டும். மலைவாழ் மக்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்த வேண்டும். போலீசாரின் தொடர் நடவடிக்கை மலைவாழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பிறந்தநாள் கொண்டாடிவிட்டு தூங்கியபோது நள்ளிரவு அடுக்குமாடி வீடு இடிந்து மாணவி உள்பட 3 பேர் பலி-5 பேர் படுகாயம்
ஆந்திர மாநிலம் மூனேறு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஜீப்புடன் வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்கள்
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணி..!!
எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: சட்ட நிபுணர்களுடன் ராகுல் அவசர ஆலோசனை..!
எதிர்கட்சிகளின் முழக்கம் காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..!
இந்தியாவில் 2025க்குள் காசநோயை முழுவதுமாக ஒழிப்பதே நமது குறிக்கோள்: காசநோய் ஒழிப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!