கடலூர் அருகே புதுமை கேப்சூல் மூலம் நெல் நடவு பணி
2018-09-14@ 00:28:46

ஸ்ரீமுஷ்ணம்: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே சேல்விழி கிராமத்தில் விவசாயிகள் சம்பா நெல் நடவு பணிகள் செய்து வருகின்றனர். போதிய மகசூல், லாபம் கிடைக்காததால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிவக்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நெல் நடவில் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். நெல்மணிகளை நாற்றங்காலில் இடாமல் ஜெலட்டின் கேப்சூல்களில் இட்டு இவர்கள் சாகுபடி செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் கேப்சூல் மூலம் பயிர் செய்வதை கண்டறிந்த இவர்கள் இந்த புதிய முறையை பின்பற்றி நடவு பணியை செய்ததாக கூறினர்.
ஒவ்வொரு கேப்சூல்களுக்குள்ளும் இரண்டு நெல்மணிகள், இயற்கை முறையில் தயாரான வேப்பங்கொட்டை தூள், எரு, நுண்ணூட்ட சத்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை நிரப்பப்பட்டு நடவு செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 60 ஆயிரம் கேப்சூல்கள் வீதம் தேவைப்படும். நாற்றங்கால் முறைக்கு ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். கேப்சூல் முறையில் 2600 கிராம் விதை நெல்லே போதும் என கூறுகிறார்கள். இந்த முறையை பயன்படுத்துவதால் நூற் பூச்சி, வேர் பூச்சி போன்ற நோய்கள் பயிரை தாக்காது என்றும், இம்முறையில் சாகுபடி செய்யும்போது நேரம், நீர் மிச்சமாவதுடன், விளைச்சல் அதிகமாவதோடு, அதிக நோய் தாக்குதலும் ஏற்படுவதில்லை என இவர்கள் கூறுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் முதன் முதலாக இப்பகுதியில் கேப்சூல் நடவு முறை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.! டெல்டா பாசனத்திற்கு 24ம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்கிறார்
பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையில் நல்லது எதுவும் இல்லை; அமைச்சர் பொன்முடி பேச்சு
அரிசி, மண்ணெண்ணை கடத்தல் தடுப்பால் ரூ.2,630 கோடி சேமிப்பு; அமைச்சர் சக்கரபாணி தகவல்
கோயில் குளத்தை தூர்வாரிய போது சோழர் காலத்து 7 உறை கிணறுகள் கண்டுபிடிப்பு
உதகைப் பயணத்தில் இன்று பழங்குடியினரான தோடர்களின் கிராமத்திற்குச் சென்று, அவர்களது தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்