தூணக்கடவு அணை நீர்மட்டம் உயர்வு
2017-09-23@ 12:23:37

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த தூணக்கடவு அணையின் நீர்மட்டம், தற்போது 20.50 அடியாக உயர்ந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து பெய்த கனமழையால், பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், டாப்சிலிப்பை அடுத்த மொத்தம் 22 அடி கொண்ட தூணக்கடவு அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்தும், மழைபெய்யும் போது மலைமுகடுகளில் இருந்தும் தண்ணீர் வருகிறது.
இந்த தூணக்கடவு அணைக்கு, பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் சர்க்கார்பதி நீர் மின்நிலையத்தில் உள்ள கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி மற்றும் ஆழியார் அணைகளுக்கு செல்கிறது. இதில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு பரம்பிக்குளத்திலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தூணக்கடவு அணைக்கு வினாடிக்கு சுமார் 500கன அடி முதல் 700கன அடிவரை இருந்தது. மேலும், மழை தொடர்ந்து பெய்ததால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக, தூணக்கடவு அணையின் நீர்மட்டம் தற்போது 20.50அடியை எட்டியுள்ளது, என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!