தமிழ் எண்களுடன் 18ம் நூற்றாண்டு மைல் கல்:புதுகை அருகே கண்டுபிடிப்பு
2016-07-08@ 14:50:39

புதுக்கோட்டை: ஆதனக்கோட்டையில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண்களுடன் கூடிய மைல்கல் கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழ் ரோமன், அரபு எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலையம் அருகே தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், ஆய்வுக்குழு உறுப்பினர் ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மண்ணில் புதைந்து கிடந்த தமிழ் மற்றும் ரோமன் எண்களுடன் கூடிய மைல் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மைல்கல்லின் வரலாற்று பின்னணி குறித்து மாவட்ட தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆசிரியர் மணிகண்டன் கூறியதாவது:
18ம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை ஆதனக்கோட்டை வழியாக சாலை அமைத்து முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டது என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தமிழ் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள மைல்கல் கல்வெட்டில் ஆதனக்கோட்டை “ய௬” அதாவது 16 மைல் என்றும் தஞ்சை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதனக்கோட்டை “௧௪ “ அதாவது 14 மைல் என்றும் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வருபவர்களுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் நடப்பட்டுள்ளது.
இதேபோல் மேட்டுப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட மைல் கல்லிலும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதனக்கோட்டையின் புறப்பகுதியிலும் மைல்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதனக்கோட்டையிலிருந்து கூழியான்விடுதி வரை தற்போதுள்ள நெடுஞ்சாலையும் அதனைத்தொடர்ந்து புதுகைக்கு செல்லும் பாதை மேட்டுப்பட்டி வழியாகவே அப்போதைய புதுக்கோட்டைக்கான நெடுஞ்சாலை அமைந்துள்ளதை இந்த மைல்கல் கல்வெட்டு உறுதி
தற்போது நடைமுறையிலுள்ள அரபு எண்கள் புதுகை சமஸ்தானத்திற்குட்பட்ட மைல்கற்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதோடு ரோமன் எண்களையும் தமிழ் எண்களையும் மட்டுமே பயன்படுத்தி இந்த மைல்கல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழ் எண்கள் அரசு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. தமிழ் எண்கள் சமீப காலமாகத்தான் புழக்கத்திலிருந்து போயிருக்கிறது என்பதையும் தெளிவாக்குகிறது என்றார்.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!