ஆகம விதி மீறல் தடுக்க கருத்து கேட்பு கூட்டம்
2012-08-20@ 01:08:21
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரகாரத்தில் ஆரம்ப காலத்தில் பதிக்கப்பட்டிருந்த கருங்கற்களுக்கு பதிலாக புதிதாக கருப்பு கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் வெப்பம் தாங்க முடியாமல் பிரகாரத்தை சுற்றி வர மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் வழுக்கி விழ வேண்டிய நிலை உள்ளது. இது தவிர பிரகாரத்திலிருந்து பார்த்தால் கோபுரம் தெரியாத அளவுக்கு மறைக்கும் வகையில் ஷெட் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே கிழக்கு கோபுரத்தின் முன்பாக இரு பக்கமும் ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிது தொலைவிலிருந்து பார்த்தாலும் கோபுரம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோயிலின் உட்பக்கமும் ஷெட் அமைப்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஆகம விதிகளை மீறி நடக்கும் பணிகளை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரசாரம் நடத்தப்பட்டன. சில அமைப்புகள் கோர்ட்டிலும் முறையிட்டுள்ளன.
இந்நிலையில் கோயிலில் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறுத்தக்கோரி, கருத்து கேட்பு கூட்டம் திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. திருவல்லிக்கேணி குடியிருப்போர் நல சங்கங்கள், நண்பர்கள் குழு, ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கம், திருவல்லிக்கேணி பிராமணர்கள் நல சங்கம், யாதவ சபை, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பிலான பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு வக்கீல் சம்பத்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆகம விதி மீறி நடக்கும் பணிகளை நிறுத்த வலியுறுத்துவது, பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி, வரும் 25ம் தேதி கண்டன பேரணி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2012-08-20@ 01:08:21
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரகாரத்தில் ஆரம்ப காலத்தில் பதிக்கப்பட்டிருந்த கருங்கற்களுக்கு பதிலாக புதிதாக கருப்பு கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் வெப்பம் தாங்க முடியாமல் பிரகாரத்தை சுற்றி வர மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் வழுக்கி விழ வேண்டிய நிலை உள்ளது. இது தவிர பிரகாரத்திலிருந்து பார்த்தால் கோபுரம் தெரியாத அளவுக்கு மறைக்கும் வகையில் ஷெட் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே கிழக்கு கோபுரத்தின் முன்பாக இரு பக்கமும் ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிது தொலைவிலிருந்து பார்த்தாலும் கோபுரம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோயிலின் உட்பக்கமும் ஷெட் அமைப்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஆகம விதிகளை மீறி நடக்கும் பணிகளை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரசாரம் நடத்தப்பட்டன. சில அமைப்புகள் கோர்ட்டிலும் முறையிட்டுள்ளன.
இந்நிலையில் கோயிலில் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறுத்தக்கோரி, கருத்து கேட்பு கூட்டம் திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. திருவல்லிக்கேணி குடியிருப்போர் நல சங்கங்கள், நண்பர்கள் குழு, ஸ்ரீனிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கம், திருவல்லிக்கேணி பிராமணர்கள் நல சங்கம், யாதவ சபை, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பிலான பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு வக்கீல் சம்பத்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆகம விதி மீறி நடக்கும் பணிகளை நிறுத்த வலியுறுத்துவது, பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி, வரும் 25ம் தேதி கண்டன பேரணி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகள்
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!!
பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
இந்திய விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடு தான்: சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது; உள்புற ஒற்றுமை மிக அவசியம்: தேசியக்கொடியை ஏற்றி முதல்வர் ஸ்டாலின் உரை..!!
75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
கடலில் குளித்தபோது விபரீதம் அக்கா, தம்பி உள்பட 4 பேர் ராட்சத அலையில் மாயம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!