காஷ்மீரில் நீடிக்கிறது வன்முறை: பதற்றம் நீடிப்பதால் ராணுவம் குவிப்பு
2016-04-17@ 09:09:51

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் வன்முறையை ஏற்றுகொள்ளமுடியாது என்று அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார். குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இளைஞர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல்வீச்சீல் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி சந்தித்து பேசினார். வன்முறையை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது என்று அப்போது அவர் கூறினார். மேலும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மாகம், லங்காடே, ஹண்ட்வாரா, குப்வாரா உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கலவரம் காரணமாக ஸ்ரீ நகரில் கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
கோட்டயம் அருகே இரட்டை ரயில் பாதை பணிகள் நாகர்கோவில் ரயில் உட்பட 21 ரயில்கள் ரத்து
2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
ஆட்சேர்ப்பு முறைகேடு சம்பவத்தில் புதிய வழக்கு; லாலு வீட்டில் சிபிஐ சோதனை.! பீகாரில் பரபரப்பு
சிந்தனை அமர்வு கூட்டத்தை தொடர்ந்து ராகுல் காந்தி லண்டன் பயணம்; 23ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலையில் உரை
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிக்கு நிவாரணம் தரமுடியாது: நீதிபதிகள் உத்தரவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்