ஜெ., கூட்டத்திற்காக தீவுத்திடல் பொருட்காட்சி அரங்குகள் அகற்றம் : கோடிக்கணக்கில் இழப்பு என புகார்
2016-04-08@ 10:15:54

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்காக சென்னை தீவுத்திடலில் சுற்றலாப் பொருட்காட்சி அரங்குகள் அகற்றப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை தீவுத்திடலில் நாளை தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார். இதற்காக தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுலா பொருட்காட்சி அரங்குகளை பொக்லைன் எந்திரங்களை கொண்டு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். ஒப்பந்த விதியின் படி 40 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றாமலே முன்னறிவிப்பின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
அரங்குகள் திடீரென அகற்றப்பட்டதால் அவற்றை அமைத்தவர்களுக்கும், பொருட்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்த தனியார் நிறுவனத்திற்கும் கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் துணையோடு நடைபெற்ற இந்த அகற்றத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரங்க அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அடுத்த 3 மணி நேரத்தில் குமரி, நெல்லை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
மோட்டார் வாகன சட்டப்படி சரியாக இல்லாத நம்பர் பிளேட் 27,891 வாகனங்கள் மீது வழக்கு
மதுரவாயல் - துறைமுகம் இடையே ரூ.5, 800 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க ஒப்புதல்: சுற்றுச்சூழல் நிபுணர் குழு வழங்கியது
போஸ்டல் லைப் இன்சூரன்சுடன் எதை இணைக்க வேண்டும்?
சொத்துவரி செலுத்த தவறினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை
2ம் நாளாக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ நிகழ்வில் அரசின் நலத்திட்டங்கள் பெற மக்களை அலைக்கழிக்க கூடாது: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!