நாய் குட்டியை பிரித்ததால் பாசக்கார குரங்கு ஆவேசமாக சுற்றுகிறது
2016-01-05@ 12:35:24

ஈரோடு: ஈரோட்டில் கடந்த 3 நாட்களாக நாய்குட்டியுடன் சுற்றி வந்த குரங்கிடமிருந்து நாய் குட்டியை பிரித்ததால் குரங்கு ஆவேசத்துடன் சுற்றி வருகிறது. இந்த குரங்கை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தும் அதில் சிக்காததால் வனத்துறையினர் கவலையில் உள்ளனர். ஈரோடு முத்துவேலப்பா வீதி, எஸ்.கே.சி.வீதி ஆகிய வீதிகளில் கடந்த 3 நாட்களாக ஒரு குரங்கு நாய் குட்டியை அரவணைத்தபடி சுற்றி வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் குரங்கிற்கும், நாய்குட்டிக்கும் பழங்கள், பிஸ்கட்டுகளை வழங்கினார்கள். அதை சாப்பிட்டு விட்டு நாய் குட்டியை விடாமல் தூக்கியபடி அங்கும், இங்கும் சென்று வந்தது.
கடந்த 2 நாட்களாக முத்துவேலப்பா வீதியில் உள்ள ஆறுமுகம் நஞ்சம்மாள் காம்பவுண்ட் பகுதியில் உள்ள மரங்கள், மின்கம்பங்களில் நாய்குட்டியுடன் குரங்கு தஞ்சமடைந்திருந்தது. நாய்குட்டி மின்கம்பத்தின் மேல் பகுதியில் குரங்குடன் இருந்தபோது தவறி விழுந்து காயமடைந்தது. இதனால் நாய் குட்டியை குரங்கிடமிருந்து மீட்க பொதுமக்கள் போராடியபோது நாய்குட்டியை விடாமல் குரங்கு தூக்கி சென்றது. இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் குரங்கை பிடிக்க கூண்டு அமைத்துள்ளனர். ஆனால் கூண்டிற்குள் சிக்காமல் குரங்கு நாய்குட்டியுடன் தப்பியோடியது. குரங்கிற்கு உணவு வழங்கி அதை பிடிக்க முயன்றபோது உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் மரத்தில் தஞ்சமடைந்தது.
இந்நிலையில் நேற்று குரங்கை பிடிப்பதற்காக சுருக்கு கம்பியை வீசியுள்ளனர். அந்த கம்பி குரங்கு மீது பட்டதால் நாய்குட்டியை விட்டு விட்டு கம்பியில் இருந்து தப்பித்து ஓடியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வனத்துறையினர் குரங்கிடமிருந்து நாய் குட்டியை மீட்டனர். தன்னிடம் இருந்து நாய்க்குட்டியை பிரித்ததால் குரங்கு ஆவேசத்துடன் சுற்றி வருகிறது. நாய்க்குட்டியை சுமந்து சென்றபோது அமைதியாக இருந்த குரங்கு தற்போது ஆவேசமடைந்து பொதுமக்களை மிரட்டி வருகிறது. இதனால் குரங்கை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக வனத்துறையிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் குரங்கு தப்பி சென்று வருவதால் வனத்துறையினர் கவலையில் உள்ளனர். குரங்கிடமிருந்து நாய் குட்டியை பிரித்ததால் குரங்கு பொதுமக்களை தாக்க வாய்ப்புள்ளது. உடனடியாக குரங்கை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
100 நாள் வேலைவாய்ப்பு திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: முத்தரசன் அறிவிப்பு
அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம்: ஈரோடு மண்டபத்துக்கு சீல்
புதுச்சேரி சாராயக்கடைக்கு செல்ல ஆற்றில் செம்மண் சாலை அமைப்பு: பள்ளம் தோண்டி தடுத்த போலீஸ்
மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து
தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று திடீர் ஆய்வு
ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளில் இதுவரை 20 கிலோ தங்கம் மீட்பு: கடலோர காவல் படை நடவடிக்கை
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!