திருமுல்லைவாயல் அருகே கள்ள துப்பாக்கியுடன் எஸ்ஐ மகன் கைது
2015-02-03@ 02:00:54

சென்னை, பிப்.3: கள்ள துப்பாக்கியுடன் பைக்கில் சுற்றிய எஸ்ஐ மகன் உள்பட 2 பேர் வாகன சோதனையில் சிக்கினர். இவர்களுக்கு நக்சலைட்களுடன் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் தனியார் பள்ளி அருகே செக்போஸ்ட் உள்ளது. இங்கு, நேற்று காலை எஸ்ஐ முத்துராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் 2 வாலிபர்கள் வேகமாக சென்றனர். அவர்களை போலீசார் மடக்கி நிறுத்த முயன்றனர். ஆனாலும், அவர்கள் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றனர். உடனே போலீசார், அவர்களை விரட்டி சென்று மடக்கினர். பைக்கை சோதனை செய்தபோது, பெட்டியில் ஒரு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, துப்பாக்கிக்கு உரிய ஆவணம் இல்லை. மேலும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களை திருமுல்லைவாயல் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
அதில், ஆவடி அடுத்த அண்ணனூர் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சைமன் ராஜா (36), திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் குடியிருப்பை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் ராஜா (34) என தெரிந்தது. இருவரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் சூபர்வைசராக உள்ளனர். ராஜாவின் தந்தை பாலசுப்பிரமணியம் சென்னை அசோக்நகர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிவதும் தெரியவந்தது.மேலும், இருவரும் கடந்த டிசம்பரில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு அசாம் மாநிலம் சென்று ரூ.70 ஆயிரம் கொடுத்து, ஒரு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் வாங்கியுள்ளனர். சென்னை வந்த அவர்கள், தஞ்சாவூரை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவருக்கு துப்பாக்கியை கொடுப்பதற்காக, சைமன் ராஜா வீட்டில் மறைத்து வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கள்ள துப்பாக்கிகளை சப்ளை செய்தார்களா, இவர்களின் பின்னணியில் யார் யார் உள்ளனர். தமிழகம், ஆந்திரா உள்பட பல மாநிலங்களின் காட்டுப்பகுதியில் நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ளதால், அவர்களுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துகின்றனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, 4 தோட்டாக்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
யானை தந்தத்துடன் வாலிபர் கைது
போதைப் பொருள் கொடுத்து அடிமையாக்கி 20 பள்ளி மாணவிகள் பலாத்காரம்: கேரளாவில் 9ம் வகுப்பு மாணவன் கைது
அம்பத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.12 கோடி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் பில்டருக்கு விற்பனை: 3 பேர் கைது; 6 பேருக்கு வலை
பேடிஎம்மின் கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை மாற்றி பணம் மோசடி; ஊர்க்காவல் படை வீரர் கைது
முட்டுக்காடு பண்ணை வீட்டில் பயங்கரம்: மனைவியை கொன்று விட்டு கணவன் தற்கொலை முயற்சி
உடலில் சூடு வைத்த கொடூரம் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!