தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரே வாரத்தில் ஒய்எஸ்ஆர் காங். பிரமுகர்கள் 49 பேர் கைது: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஜெகன்மோகன் விமர்சனம்

Advertisement

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் பெண் தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக ஒரே வாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி பிரமுகர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றது முதல் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் பிரமுகர்களை குறிவைத்து ஆந்திர போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 6ஆம் தேதிக்கு பிறகான ஒரு வார காலத்தில் மட்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் 680 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியதுடன் 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் 49 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள், பிற காட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்கள் குறித்து தரம் தாழ்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது . ஆனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரஅரசின் நடவடிக்கைகள் கருத்துரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement

Related News