தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யோகா வகுப்பு எடுக்க சென்ற இடத்தில் 40 சவரன், வைர நெக்லஸ் திருடிய பெண் பிடிபட்டார்: ரூ.4.78 லட்சம் மீட்பு

Advertisement

சென்னை: வடபழனியில் யோகா வகுப்பு எடுக்க சென்ற போது 40 சவரன், வைர நெக்ல்ஸ் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.4.78 லட்சத்தை போலீசார் மீட்டனர். வடபழனி, ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் ஜனனி (36). இவர், சில நாட்களுக்கு முன், வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்த போது, 40 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜனனி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கே.கே.நகர் காவல் நிலைய போலீசாரால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே குடியிருப்பில் வசித்து வரும் காயத்ரி (48) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 வைர நெக்லஸ் மற்றும் பணம் ரூ.4.78 லட்சம் மீட்கப்பட்டது. விசாரணையில் காயத்ரி, யோகா வகுப்பு எடுப்பதற்காக ஜனனி வீட்டிற்கு சென்று வரும் போது சுமார் 2 மாதங்களாக ஜனனி வீட்டிலிருந்து சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட காயத்ரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement