யோகா வகுப்பு எடுக்க சென்ற இடத்தில் 40 சவரன், வைர நெக்லஸ் திருடிய பெண் பிடிபட்டார்: ரூ.4.78 லட்சம் மீட்பு
Advertisement
விசாரணையில் அதே குடியிருப்பில் வசித்து வரும் காயத்ரி (48) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 வைர நெக்லஸ் மற்றும் பணம் ரூ.4.78 லட்சம் மீட்கப்பட்டது. விசாரணையில் காயத்ரி, யோகா வகுப்பு எடுப்பதற்காக ஜனனி வீட்டிற்கு சென்று வரும் போது சுமார் 2 மாதங்களாக ஜனனி வீட்டிலிருந்து சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட காயத்ரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Advertisement