Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போராட்டத்தின் போது நடந்த வன்முறை வங்கதேசத்தில் மாஜி காவல் துறை அதிகாரிகள் 41 பேர் கைது

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதில் பயங்கர வன்முறை ஏற்பட்டு ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர்கள் போராட்டத்தின் போது வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக 1059 போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கதேச பத்திரிகை புரோதம் ஆலோ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,வன்முறையில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களின் நுாற்றுக்கணக்கான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின் போது தாக்குதல்களை நடத்தியதாக 1059 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த புகார்களை தொடர்ந்து இதுவரை முன்னாள் ஐஜிக்கள் உட்பட 41 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.