காட்மண்ட்: நேபாளத்தின் சந்திரிகிரி நகராட்சியில் உள்ள நக்துங்காவில் காட்மண்ட் நோக்கி சென்ற பயணிகள் பஸ்சில் நடத்திய சோதனையின்போது பயணி ஒருவர் 274கிராம் தங்கம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் மகாதேவ்(31) என்பதும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அவர் சுங்க வரி செலுத்தாமல் 274கிராம் தங்கத்தை எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.


