தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனாதை என்று கூறி 4 பெண்களை ஏமாற்றி திருமணம்: கல்யாண மன்னன் கைது

Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் அனாதை என்று கூறி இளம்பெண்களின் மனதை உருக வைத்து 4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் காசர்கோடு அருகே வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தீபு பிலிப் (36). பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது தான் அவரது பொழுதுபோக்காக இருந்துள்ளது. தன்னுடைய மனதிற்கு பிடித்த பெண்ணைப் பார்த்தால் உடனே அவரிடம் சென்று, தான் ஒரு அனாதை என்றும், இந்தக் காரணத்தால் யாரும் தனக்கு பெண் தராததால் நீண்ட காலமாக தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுவார்.

தீபு பிலிப்பின் சோகக்கதையை கேட்டு மனமிரங்கும் இளம்பெண்களை உடனடியாக அவரது வலையில் வீழ்த்தி விடுவர். இப்படித்தான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காசர்கோட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை முதன் முதலாக திருமணம் செய்தார். 3 வருடங்களுக்கு மேல் தீபு பிலிப் அவருடன் வாழ்ந்து வந்தார். இதில் 2 குழந்தைகளும் பிறந்தன. அதன் பிறகு பெண்ணிடம் இருந்து நகை, பணத்தை பறித்துவிட்டு நைசாக நழுவினார். பின்னர் தீபு பிலிப் 2வது பெண்ணுக்கு வலை விரித்தார். காசர்கோட்டிலேயே மீண்டும் ஒரு திருமணத்தை செய்தவர், அந்த பெண்ணுடன் தமிழ்நாட்டுக்கு சென்று ஒரு சில வருடங்கள் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரையும் விட்டுவிட்டு எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 3வதாக திருமணம் செய்தார்.

இவருடன் இருந்தபோது தான் ஆலப்புழாவை சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவரையும் தன்னுடைய வலையில் வீழ்த்திய தீபு பிலிப், 4வதாக திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண் மூலம் தான் தனக்கு சிக்கல் ஏற்படப்போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. தீபு பிலிப்பின் 2வது மனைவியும், ஆலப்புழாவை சேர்ந்த 4வது மனைவியும் பேஸ்புக் தோழிகள் ஆனார்கள். அப்போது தான் 2 பேருக்கும் ஒரே கணவன் தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 4வது மனைவி கோன்னி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாண மன்னன் தீபு பிலிப்பை கைது செய்தனர். இனி அனாதையாக வெளியே இருக்க வேண்டாம். சிறையில் துணைக்கு பலர் இருப்பார்கள் என்று கூறி அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News