தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை

சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம் சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் தேர்தலுக்கு முன் அரசு இலவசமாக மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு போன்ற பொருட்களை அறிவிப்பவர்கள் ஆளுக்கு ஒரு மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள் என்று பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.

Advertisement

இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது. மேலும், சி.வி சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதன் விசாரணை தொடர்பாக கடந்த அக்டோபர் 17ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

அப்போது அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி நேரம் கேட்டிருந்தார். இதனையடுத்து கடந்த 7ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி மகளிர் ஆணையம் சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement