தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்: மருத்துவ சேவைகள் பாதிப்பு

Advertisement

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார, கொலை வழக்கில் நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளதால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த மாதம் 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் மாநில அரசு செய்து கொண்ட உடன்பாட்டையடுத்து கடந்த செப்டம்பர் 21ம் தேதி இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைகளை மட்டும் செய்து வந்த அவர்கள், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றவில்லை.

இந்நிலையில் இளநிலை மருத்துவர்கள் மீண்டும் காலவரையற்ற முழு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கூறியதாவது, “பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார, கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கும் நோக்கத்துடன் சிபிஐ விசாரணை மெதுவாக இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது ” என்று தெரிவித்துள்ளர். இளநிலை மருத்துவர்கள் நேற்று பேரணி நடத்தினர்.

Advertisement

Related News