Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இது என்ன ராஜதந்திரம்?

அருணாச்சல் மாநிலத்தை சேர்ந்த பெண் சீனாவில் சிக்கித்தவிக்கிறார். காரணம் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று சீனா அறிவித்துவிட்டது. அருணாச்சல் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை சீனா ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பதே அதன் காரணம். இந்திய பிரஜை சீனாவில் தவிக்க பிரதமர் மோடி இன்று வரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஏன் வெளியுறவுத்துறை கூட வாய் திறக்க மறுப்பது என்ன ஒரு ராஜதந்திரம்? அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்​தவர் பெமா வாங் தாங்​டாக். இவர் லண்​டனில் இருந்து ஜப்​பான் சென்​றுள்​ளார்.

வழி​யில் சீனாவின் ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் இறங்கி 3 மணி நேரத்துக்​குப்​பின் மாற்று விமானத்தில் ஜப்​பான் செல்ல திட்டமிட்​டிருந்​தார். கடந்த 21ம் தேதி இவர் ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கிய​போது, இவரது இந்​திய பாஸ்​போர்ட் செல்​லாது என சீன குடி​யுரிமை அதி​காரி​களும், சீன ஈஸ்டர்ன் ஏர்​லைன்ஸ் நிறுவன அதி​காரி​களும் கூறி​யுள்​ளனர். காரணம் அவரது பாஸ்​போர்ட்​டில் பிறந்த இடம் அருணாச்​சலப் பிரதேசம் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. அருணாச்​சலப் பிரதேசம் சீனா​வில் இருக்​கும் பகுதி எனக் கூறி, அவரது இந்​திய பாஸ்​போர்ட் செல்​லாது என கூறி பெமா வாங்கை சீன அதி​காரி​கள் கைது செய்​துள்​ளனர்.

18 மணி நேரத்​துக்கு மேலாக அவர் ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் சிறைவைக்கப்பட்​டார். அவரது பாஸ்​போர்ட்டை முடக்​கி, அவர் ஜப்​பான் செல்வதை​யும் தடுத்து நிறுத்​தினர். அப்போது பெமா வாங் சீன பாஸ்​போர்ட்​டுக்கு விண்​ணப்​பிக்க வேண்​டும் எனக் கூறி சீன அதி​காரி​கள் கேலி செய்​துள்​ளனர். விமான நிலை​யத்​தில் உள்ள உணவு விடுதி மற்​றும் இதர வசதி​களை பெமா வாங் பயன்​படுத்த அனு​ம​திக்​க​வில்​லை. பின்​னர் லண்​டனில் உள்ள நண்​பர் மூலம் ஷாங்​காய் நகரில் உள்ள இந்​திய தூதரகத்தை பெமா வாங் தொடர்பு கொண்​டார். இந்​திய தூதரக அதி​காரி​கள் தலை​யிட்டு பெமா வாங்கை ஜப்​பானுக்கு அனுப்பி வைத்​தனர்.

பாதிக்கப்பட்ட அருணாச்சல் பெண்மணி பெமா வாங் தாங்​டாக் கூறுகை​யில், ‘‘இது இந்​திய இறை​யாண்மை மீதான நேரடி தாக்​குதல். இந்த விவ​காரம் குறித்து பிரதமர் மோடி​யும், இந்​திய அதி​காரி​களும் சீன அரசுடன் பேச வேண்​டும். அருணாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்​தி​யர்​கள் வெளி​நாடு​கள் செல்​லும்போது, அவர்​களின் பாது​காப்​புக்கு உத்​தர​வாதம் அளிக்​கப்பட வேண்​டும்’’ என கூறி​யுள்​ளார். இந்​தியா - சீனா இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதல் முடிந்துவிட்டது. அதனால் சீனாவுடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உறவு மீண்டும் துளிர்த்து உள்ளது. இருதரப்புக்கும் இடையே விமான சேவை கூட தொடங்கப்பட்டு விட்டது.

இந்த உறவு நிலையை மீறி இந்திய குடிமகளை, சீன குடி​யுரிமை அதி​காரி​கள்​ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி அத்​து​மீறலில்​ ஈடுபட்​டு உள்​ளனர்​. வெளியுறவுத்துறை தலையிட்டு அவரை மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு அதிகாரப்பூர்வமாக ஒரு எதிர்ப்பை கூட ஒன்றிய அரசு பதிவு செய்யவில்லை. ஒரு இந்திய பிரஜை அவமானப்படும்போது, கைதி போல வெளிநாட்டில் நடத்தப்படும்போது, அதுவும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆவணமான பாஸ்போர்ட்டை செல்லாது என்று ஒரு நாடு குறை மதிப்பிடும்போது கொந்தளிக்க கேட்கவில்லை, ராஜ்ஜிய ரீதியாக ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் இருப்பது என்ன விதமான ராஜதந்திரம்? ஒரு வேளை இதுதான் மோடி தந்திரமோ?

அந்த ஒன்றிய வெளியுறவுத்துறைக்குத்தான் வெளிச்சம்.