தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு: 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

ஆண்டிபட்டி: மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை அமைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கடந்த 2 மாதங்களுக்கு முன் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட முதல்போக பாசனத்திற்காக அணையில் இருந்து ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் சரியவில்லை. இந்நிலையில், அணையில் இருந்து

Advertisement

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையேற்று வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி இன்று காலை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டார். இதையடுத்து வினாடிக்கு 1,130 கனஅடி தண்ணீர் வீதம் அணையின் பிரதான 7 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்தது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர்கள் பிரவீன்குமார் (மதுரை), ரஞ்ஜீத் சிங் (தேனி), சரவணன் (திண்டுக்கல்), தேனி தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

120 நாட்களுக்கு திறக்கப்படும்:

அணையில் இருந்து தற்போது ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் 120 நாட்களில் முதல் 45 நாட்களுக்கு தொடர்ந்தும், அடுத்து வரும் 75 நாட்களுக்கு தண்ணீர் இருப்பை பொருத்து முறை வைத்தும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரியாறு பாசனப் பகுதிகளில் உள்ள சுமார் 85,563 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்கள், திருமங்கலம் பிரதான பாசன கால்வாயின் கீழ் உள்ள 19,439 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் பாசன கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News