Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கடந்த ஆண்டு நடந்த போர் இந்தியா- பாக். நடத்திய நாடகம் என இம்ரான் சகோதரி சர்ச்சை

இஸ்லாமாபாத்: கடந்த ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போர், பாக். ராணுவத்தின் நற்பெயரை உயர்த்துவதற்காக இரு தரப்பும் இணைந்து நடத்திய நாடகம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி நவுரீன் கூறியிருந்தார்.

மேலும், இஸ்ரேலை பாகிஸ்தான் அங்கீகரிக்க உள்ளதால், இந்தியா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தவில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக அவதூறு பரப்பியதாகக் கூறி இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக நவுரீனுக்கு பாகிஸ்தான் தேசிய சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.