வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா: 22ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம்
Advertisement
இந்நிலையில் மக்களவையில் அறிமுகம் செய்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெற இருக்கிறது. அப்போது பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவினரை, சிறுபான்மையினர் விவகாரம், சட்டத் துறை அமைச்சகப் பிரதிநிதிகள் சந்தித்து, மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விளக்கம் அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் தனது அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழு தாக்கல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement