Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகல்

சென்னை: நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகினார். நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு அந்த பணத்தை செலுத்தியது. இதையடுத்து, அந்த தொகை முழுவதும் தங்களுக்கு திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி பணத்தை திருப்பித் தருமாறு உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்குமாறு விஷாலுக்கு உத்தரவிட்டது. ரூ.21.29 கோடி கடனை 30% வட்டியுடன் லைகா நிறுவனத்துக்கு தர பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விஷால் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் வழக்கை ஏற்கனவே விசாரித்துள்ளதாக கூறி விலகிய நீதிபதி ஜெயச்சந்திரன், மாற்று அமர்வில் பட்டியலிட பரிந்துரை செய்தார்.