தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Advertisement

புழல்: மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புழல் பாலாஜி நகரில் உள்ள மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதவரம் சங்க வட்ட தலைவர் செல்லப்பா தலைமை தாங்கினார். இதில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டிய கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தோம்.

இக்கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க வேண்டும், கிராம உதவியாளர்களை அரசு ஊழியர்களின் பட்டியலில் டி பிரிவில் சேர்க்க வேண்டும், கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்து விட்டால் அவர்களின் வாரிசுக்கு பணி வழங்க வேண்டும், புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்கள் சிபிஎஸ்என் நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த, ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கணேசன், சுந்தரம், ரஞ்சித்குமார், கிரேன்குமார், ரகுபதி, சுவாதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement