தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை பலியான சம்பவத்தில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Advertisement

சென்னை: விக்கிரவாண்டி பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் கைதான பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிவுநீ்ர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதையடுத்து போலீஸார் சந்தேக மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பள்ளித் தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, ஆசிரியர் ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மூவரும் தாக்கல் செய்திருந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், விழுப்புரம் மாவட்டத்தி்ல் கனமழை பெய்த நிலையில் கழிவுநீர் தொட்டி சரிவர பராமரிக்கப்படாமல் இருந்ததாகவும், இந்நிலையில் அந்த எல்கேஜி மாணவி வழிதவறி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது காவல் துறை தரப்பி்ல் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ், இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் மூவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, ‘‘பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியை ஆகிய மூவருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement