தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தவெக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

Advertisement

 

 

கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் கைதாகி திருச்சி சிறையில் உள்ள தவெக மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜின் ஜாமீன் மனுவை கரூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த், துணை பொதுசெயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மதியழகனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை கடந்த 29ம்தேதி ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 

இந்த வழக்கில், மதியழகனுக்கு அடைக்கலம் தர உதவியதாக கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜையும் கைது செய்தனர். பின்னர், கரூர் ஜேஎம்1ல் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் அக்.14ம்தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் உள்ள பவுன்ராஜூக்கு ஜாமீன் வழங்க கோரி சேலம் தவெக வழக்கறிஞர்கள் கடந்த 6ம்தேதி கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதாக கூறி ஜாமீன் கொடுக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

Advertisement

Related News