விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு எஸ்.ஏ. கல்லூரியின் சைக்கிள் பேரணி
Advertisement
கல்லூரி வளாகத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம், பனவேடு தோட்டம், அருணாச்சல நகர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம் உள்ளிட்ட கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் குழுவால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்கள் வழியாக மாணவர்கள் சைக்கிள் பேரணி சென்றனர். இதில் 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் சமூக ஈடுபாடு மற்றும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வண்ணம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்குவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
Advertisement