தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு எஸ்.ஏ. கல்லூரியின் சைக்கிள் பேரணி

Advertisement

திருவள்ளூர்: திருவேற்காடு, எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ்ராஜா உத்தரவின் பேரில் விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணியை நடத்தியது. கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார், இயக்குனர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலை வகித்தனர். பேரணியை ஐஓசிஎல் நிர்வாக இயக்குனர் எம்.அண்ணாதுரை, விஜிலென்ஸ் பொது மேலாளர் சுரேஷ்குமார், முதன்மை பொது மேலாளர் வி.வெற்றி செல்வகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கல்லூரி வளாகத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம், பனவேடு தோட்டம், அருணாச்சல நகர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம் உள்ளிட்ட கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் குழுவால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்கள் வழியாக மாணவர்கள் சைக்கிள் பேரணி சென்றனர். இதில் 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் சமூக ஈடுபாடு மற்றும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வண்ணம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்குவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Advertisement

Related News