தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் மலைச்சாலை சேதம்

Advertisement

*பக்தர்கள் அவதி

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயிலுக்கு மலைச்சாலை சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வத்தலக்குண்டு அருகே கோட்டைப்பட்டியில் பிரசித்தி பெற்ற சென்றாய பெருமாள் மலைக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக புரட்டாசி மாதம் மற்றும் விசேஷ காலங்களில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும்.

மலையின் மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு செல்ல முன்புபுறம் படிக்கட்டுகள் உள்ளன. மலையின் பின்புறம் சாலை அமைக்கப்பட்டு மலை உச்சிக்கு கார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் சென்று வந்தன. இதனால் படி ஏற முடியாத வயதான பக்தர்கள் மலையேறி சுவாமியை தரிசித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உரிய பராமரிப்பில்லாததால், மலைச்சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால் ஆட்டோக்கள், கார்கள் மலை உச்சிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பக்தர்கள் நலன் கருதி சேதமடைந்த நிலையில் உள்ள மலைச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News