தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வருசநாடு அருகே 3 மாதத்திற்கு பிறகு யானைகஜம் அருவியில் நீர்வரத்து: மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி

வருசநாடு: வருசநாடு அருகே யானைகஜம் அருவியில் 3 மாதங்களுக்கு பிறகு தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது உப்புத்துறை மலைக்கிராமம். இங்குள்ள யானை கஜம் அருவி பிரசித்திபெற்றது. இந்த அருவியில் குளிக்க தடை உள்ளது. போதிய மழை இல்லாததால் கடந்த 3 மாதங்களாக இந்த அருவி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் யானை கஜம் அருவியில் தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

அருவிக்கு நீர்வரத்து காரணமாக உப்புத்துறை, ஆத்துகாடு, வாய்க்கால்பாறை, ஆட்டுப்பாறை, கோவில்பாறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் தட்டுபாடு நீங்கும் என கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், இங்கு அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆத்துக்காடு மலைக்கிராமத்தை சேர்ந்த மாரிச்சாமி கூறுகையில், `யானை கஜம் அருவி பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க வசதியாக தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். இந்த அருவியை சுற்றுலா தலமாக அறிவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Related News