தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வண்டலூர் வனப்பகுதி எல்லையில் கழிவுகள் செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை அளிக்க வேண்டும்: தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Advertisement

சென்னை: வண்டலூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லைகளில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக பாலாஜி தங்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் , உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை அகற்றுவதில் சுணக்கம் காட்டினால் அதன் மீது உரிய உத்தரவை வழங்க தீர்பாயம் தயங்காது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதி, பெருங்களத்தூரில் இருந்து சாதனாதாபுரம், ஆலப்பாக்கம், நெடுகுன்றம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் வனப்பகுதியின் வடக்கு எல்லையில் உள்ள 1.2 கி.மீ. சாலை.

இந்த பகுதியில், சாலையைப் பயன்படுத்தும் உள்ளூர்வாசிகள் தங்கள் வீட்டுக் கழிவுகளை சாலையின் ஓரத்தில், அதாவது வனப்பகுதி எல்லையில் வீசுகின்றனர். கழிவுகளை அகற்றுவதற்கான தொட்டிகள் இல்லாததால் குப்பைகளை அங்கே கொட்டுகின்றனர் என மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். வனப்பகுதியில் இருந்து வரும் மான்கள் சாலையைக் கடந்து, விமானப்படை நிலையம், தாம்பரம் வழியாக சேலையூருக்குச் சென்று திரும்புவதால், அப்பகுதி புள்ளிமான் நடைபாதையின் ஒரு பகுதியாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முன்மொழியப்பட்ட கிழக்கு புறவழிச் சாலையை முடித்தவுடன், வனத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை மானுடவியல் அழுத்தங்களிலிருந்து பாதுகாக்க ஒரு சுற்றுச்சுவர் கட்டப்படும் என்று மாவட்ட வன அலுவலர் கூறினார். விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதும், விழிப்புணர்வு பிரசாரம் செய்வதும் பிரச்னையை தீர்க்காது என குறிப்பிட்ட வன பாதுகாப்பு அலுவலர் அப்பகுதியில் உருவாகும் திடக்கழிவுகளை தரம் பிரிக்க உரிய இடம் ஒதுக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு இந்த விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு கலெக்டர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

Advertisement

Related News