தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடலூர் சாலையில் முதியவர் தவறவிட்ட பணத்தை மீட்டு முதியவரிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் உதயகுமார்

வடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருபவர் வெற்றிவேல் இவர் வடலூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி வெற்றிவேல் வடலூர் சந்தை தோப்பு அருகில் உள்ள தையல் மிஷின் கடைக்கு சென்றார். அப்போது மஞ்சள் பை ஒன்று கீழே கிடந்தது. அதனை எடுத்து சோதனை செய்த போது அதில் ரூ.28,856 பணம் மற்றும் மொய் கவர் இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து வெற்றிவேல் வடலூர் காவல் நிலையத்திற்கு சென்று அந்த மஞ்சள் பையை ஒப்படைத்து அதை உரிய நபரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில்

Advertisement

வடலூர் அருகே கே ஆர் மூர்த்தி நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கராசு மகன் ராமலிங்கம் 72; என்பவர் கடந்த 5ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகைக்கு அவருடைய மகன் கலையரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அவரது உறவினரை காரில் அழைத்துக் கொண்டு செல்ல வடலூர் செல்லியம்மன் கோயில் அருகில் காரில் காத்திருந்தபோது காரில் ஏறி இறங்கும் போது மடியில் வைத்திருந்த மஞ்சள் நிற பை தவறி கீழே விழுந்தது என்பதும் அந்தப் பையில் ரூபாய் 28,856 பணம் மற்றும் மொய்க்கவர் இருந்தது என்று தெரிய வந்தது.

ராமலிங்கத்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்து உரிய அடையாளம் உண்மை சான்றிதழ் நகல் பெற்ற பின்னா் முதியவரிடம் பணத்தை இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் ஒப்படைத்தனர். பணத்தை மீட்டு தந்த காவல் துறைக்கு முதியவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.மேலும் பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தை கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல்க்கு பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement

Related News