தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள்: பேரூர் உதவி இயக்குனர் ஆய்வு

Advertisement

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள இசிஐ சர்ச் தெருவில், எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலையும், மாதா கோயில் தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலையும், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் பணிகளும், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் பாப்பான் குளம் சுற்றுச்சுவர் பணிகளும், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கோட்டை மசூதியில் பூங்கா அமைக்கும் பணிகளும் என மொத்தம் ரூ.67 லட்சத்தில் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.

இப்பணிகளை, திருவவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, மாதா கோயில் தெருவில் ஒரு சில தனி நபர்கள் சாலையை ஆக்கிரமித்து தங்களது வீடுகளுக்கு படிக்கட்டுகள் அமைத்திருந்தனர். இந்த படிக்கட்டுகள் சிமென்ட் சாலை அமைப்பதற்கு இடையூறாக இருப்பதாக கருதி, பேரூராட்சியினர் சாலையில் கட்டிய படிகட்டுகளை அகற்ற முற்பட்டபோது ஆக்ரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையறிந்த உதவி இயக்குனர், செயல் அலுவலரிடம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு சாலை பணிகளை தொடங்குங்கள் என உத்தரவிட்டார். பின்னர் கோட்டை மசூதி அருகில் பூங்கா பணிகளையும், பாப்பான் குளம் சுற்றுச்சுவர் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News